Saturday 13 November, 2010

மரணத்தின் வாசல்

மனம் மயக்கும் விழிகள் இல்லை

உளம் பறிக்கும் புன் சிரிப்புமில்லை

கை பிடித்து, தோள் கொடுத்து நடப்பதுமில்லை

மனம் விம்மும் விண்மீன்க் கனவுகளும் இல்லை
ஓரப்பார்வையால் உயிர்பறிக்கும் ஜாலங்களில்லை

காதோடு கதை பேசும் சரசங்களுமில்லை

விழியோடு விழி நோக்கி உளம் கலந்த தருணங்களின்

மிச்சம் மட்டுமே எஞ்சி நிற்கையிலும்

வாளின்றி குருதியின்றி மெல்ல மெல்ல உயிர் அறுக்கும்

ஊரும் உறவும் உற்ற தோழமையும் மனம் விட்டகலும்
உலகத்தின் வெளிவாசல் தாண்டி ஏனோ

மரணத்தின் வாசல் தேடி பயணிக்கச் சொல்லும்

காதல்!!