Monday 30 March, 2009

காதல்...


அவள் என்னைப் பார்த்து சிரித்தாலும்,

நான் அவளைப் பார்த்து சிரித்தாலும்

பைத்தியமாவது மட்டும் ஏன்

நானாகவே இருக்கிறேன்!?


கண்கள் கவர்ந்து

இதயம் திருடி

உயிரை உருவும்

செல்லக் கொலை

காதல்...

Friday 27 March, 2009

My first own song!!


அன்றொரு காலைப் பொழுதினிலே, எந்தன் கண்களில் விழுந்தவளே..

கண்கள் கண்டேன், இதயம் தொலைத்தேன்! 

உயிரை உருவிச் சென்றாயே, என் உயிரை உருவி சென்றாயே..

கண்டதும் காதல் என்றாலே, நகைத்தத்தில் நானும் முதல்வனன்றோ, 

உன்னைக் கண்டேன் உயிர் தொலைத்தேன், 

காதலின் வலையில் நான் விழுந்தேன் (அன்றொரு)

இதயம் தேடி ஓடிவந்தேன் உன்னிடம் வந்து சேர்ந்தடைந்தேன் 

உன்னை நோக்கி தவமிருந்தேன், கடவுளை நானும் வெறுத்திருந்தேன்..(அன்றொரு)

என்னுயிர் என்னிடம் கொடுத்து விட்டால் உயிருடன் நானும் நடந்திடுவேன் 

என்னுயிர் கொடுத்தால் பிழைத்திடுவேன் உன்னுயிர் தந்தால் பிறந்திடுவேன்... (அன்றொரு)

Original: Azhagiya Midhilai Nagarinile..

Monday 9 March, 2009

உறவுகள்




உறவுகள்.. வாழ்வின் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் அங்கங்கள். ஒரு மனிதனுக்கான சகலத்தையும் அளிப்பவை. ஒருவனுக்கு இவ்வுலகை காணும் பாக்கியத்தை கொடுப்பது தாய்மை. இந்த உலகில் வாழ வேண்டும் எனும் உத்வேகத்தைக் கொடுப்பது காதல். அது ஒரு பெண்ணின் மீது கொண்டதாய்தான் இருக்கவேண்டும் என்பதல்ல. ஒரு லட்சியத்தின் மீது கொண்ட காதலாகக் கூட இருக்கலாம். இது போன்ற உறவுகளுக்கெல்லாம் அடிப்படையாய் அமைவது அவனின் எண்ணங்கள். அவனின் எண்ணங்களைப் பொறுத்தே உறவுகளும் அமைகின்றன. உயர்ந்த எண்ணங்கள் இல்லாதவன் உயர்ந்த மனிதனாவதில்லை, வள்ளுவர் வாக்கின் படி, "வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு", அதாவது, ஆற்று வெள்ள நீரின் உயரத்தைப் பொறுத்தே அதில் மிதக்கும் மலர்களின் உயரம் அமையும், அதைப் போலவேதான், ஒருவனின் உள்ளத்தை (எண்ணத்தை) பொறுத்தே அவன் தன் வாழ்வில் எட்டப்போகும் உயரமும் அமையும். இந்த பாடத்தைக் கற்றுக் கொடுப்பதில் தான் வாழ்க்கை மிகவும் கடினமான பல சோதனைகளுக்கு உள்ளாகிறது. இந்த பாடத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கும் உறவுகள் ஏராளம், அதன் மூலமாக நமக்கு கிடைக்கும் காயங்களும், வலிகளும் ஏராளம். பொதுவாக ஒரு மனிதன் தனக்கு நடக்கும் தீங்குகளுக்கெல்லாம் பிறர் மீது குற்றம் காணத் தொடங்கும்போதுதான் இந்த உறவுகள் வலிக்கத் தொடங்குகின்றன. "தீதும் நன்றும் பிறர் தர வாரா", ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு சொற்றொடர்.ஆனால் அதைப் பொதுவாக எந்த மனிதனும் பல வலிகளுக்கு முன்னால் உணர்வதில்லை. இதை உணர்ந்தால் வாழ்வில் துன்பமும் இல்லை. இவ்வளவு பேசும் நானும் ஒன்னும் முற்றும் துறந்த முனிவனுமில்லை, சகல காரியங்களையும் கசடற செய்யும் அதிமேதாவியுமில்லை. உங்கள் எல்லாரையும் போல, பல பலவீனங்களை உடைய ஒரு சாமான்யனே. என் மனசில் ஓடும் எண்ணங்களைப் பதிவு செய்யும் ஆசையே என்னை இதனை எழுதத் தூண்டுகிறது. திருச்சி மாவட்டத்தின் மூலையிலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து, பெரும்பகுதியை அங்கேயே கழித்த பின்னர் திருச்சி மாநகரம் வந்து, பொறியியல் படித்து, பின்னர் இன்று பல்லாயிரம் மைல்கள் தாண்டி ஜப்பானுக்கு நான் வந்த வரையிலான என்னுடைய சிறு ஓட்டத்தில் பல்வகை மனிதர்களையும் உறவுகளையும் வாழ்க்கை எனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தது, இருக்கிறது, இருக்கும். ஒவ்வொரு உறவும் எனக்கு கொடுத்த பாடங்கள் ஏராளம். குறிப்பாக கல்லூரியில் நான் செலவிட்ட நான்கு வருடங்களில் இயந்திரவியல் படித்ததை விட அதிகமாக மனிதர்களையும், உறவுகளையும் படித்திருக்கிறேன். மனிதர்களில்தான் எத்தனை வகைகள்!! ஒவ்வொருவரின் செயலுக்குப் பின்னாலும் வரையறுக்கப் பட்ட ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தேன். ஒருவருக்கு சரியாகத் தோன்றுவது மற்றவருக்கு தவறாக தோன்றும் அதிசயத்தை நான் கண்டதும் அங்கேதான்.
தொடர்ந்து பதிவேன்...

Sunday 8 March, 2009

வாழ்க்கை!!!


வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அவற்றில் ஒவ்வொன்றும் ஒருவிதம். நவரசங்களையும் மனிதனுக்குள் கொண்டு வரும் அற்புத ஆசான் வாழ்க்கை. அவற்றுள் பல பாடங்கள் நம் கற்றுக்கொள்ளும் திறனை மீறியதாயும், கசப்பானதாகவும் அமைந்துவிடுகின்றன. ஆனாலும், அதையும் தாண்டி வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு தெளிவான நீரோடை போல, முன்பே ஓடுபாதை வகுக்கப்பட்டதைப் போல. சில பாடங்கள் ஒரு முறை படித்தால் தெளிவாகிறது. சில பலமுறை படித்தாலும் புரிவதில்லை.அவ்வகைப் பாடங்களை மீண்டும் மீண்டும் கற்றுகொடுத்துக் கொண்டே இருக்கிறது.முதலில் மென்மையாகவும், பின் சில நேரங்கள் கடுமையாகவும். வாழ்க்கை என்பது கடவுளைப்போல, உருவம் இன்றி, உணர்வுகள் வடிவானது.அது ஒவ்வொரு பாடத்தையும் எதாவது ஒரு சக மனிதனின் மூலமாகவோ, அல்லது சூழ்நிலைகள் மூலமாகவோ கற்றுக்கொடுக்கிறது. சிலநேரம் அன்புடன் அரவணைக்கும் தாயைப்போலவும், சிலநேரம் கண்டிப்பு காட்டும் தந்தை போலவும் , சில நேரம் தோளில் கைபோட்டு பேசும் தோழனைப்போலவும் ஆசிரியர்கள் அமைவதுண்டு. சில நேரம் அதையும் தாண்டி பல அருவருப்புக்கள் மூலமாகக் கூட பாடங்கள் கற்பிக்கப்படுவதுண்டு.அவற்றை அவன் எடுத்துக்கொள்ளும் விதமே ஒருமனிதனை, அவனது குணநலன்களை வரையறுக்கும் அளவுகோலாகிறது. வெற்றி, தோல்வி,நல்லவர்,தீயவர்,ஆசை,நிராசை,மகிழ்ச்சி,சோகம் என முரண்பட்ட பலவற்றுள் ஒரு தனிமனிதனுக்கு தரப்படவேண்டியதை முடிவு செய்வதும் அவனின் பாடங்களை எடுத்துக்கொள்ளும் விதமே . இந்த பாடங்கள் அனைத்துமே உணர்வு ரீதியிலானவயாகவே பெரும்பாலும் அமைவதுண்டு. புது உறவுகளின் மூலமாகவோ, உறவுகளின் பிரிவு மூலமாகவோ தான் பொதுவாக அவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. உறவுகள் ஒரு தொடர்கதை...உண்மையான வார்த்தை. உறவுகளில்தான் எத்துனை எத்துனை வகைகள்.!! சில ஆதாயம் சார்ந்தவை, சில அறிவு சார்ந்தவை, சில மட்டுமே இதயம் சார்ந்தவை. அவை என்றுமே ஒரு புதிராகவே இருக்கின்றன. அந்த புதிர்களை அவிழ்க்கும் சுவாரஸ்யமே வாழ்க்கை என்றும் சொல்லலாம். ஒவ்வொரு புதிரும் அவிழும்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கும். சில நாம் எண்ணியதைப் போல இருந்தால் மகிழ்ச்சி முதலிய நேர்மறையான விடயங்களையும், அப்படி இல்லாவிட்டால், சோகம், தோல்வி முதலிய எதிர்மறையான விடயங்களையும் மனிதனுக்கு அளிக்கின்றன. ஆனால், அத்துணை உறவுகளும் சில சமயங்களில் அர்த்தமற்று போவதாகக்கூட தெரிவதுண்டு.அந்த உறவுகளைப்பற்றி அடுத்து வரும் பதிவுகளில் தொடர்வேன்...

Thursday 5 March, 2009


Hai Dear,
It's been a long time since I saw you in person.. I miss you so much dear..
its tis famous saying of an unknown poet which comes t my mind whenever i think of you
"..the blush on her cheecks is more than wine..."
you're so special to me.. its ur memories n my crush on u which made my very first interview a successful one..
I was dying to control myself from proposing you manytimes during these past three years
I don't know why and how you attracted me completely into your eyes at first sight. many girls may come and go in one's life, but its only one who does stay forever, in heart.. tats u in case of mine.. I dont kno whether I'll see you again in future atleast once in my lifetime.. But I can never take you off my heart..
I put so much of arguments into my friends who asked me to propose you atleast before I leave India.. I know they 're al fake as well as you do... Its not my dad, sister or family who stood infront to stop me.. but, its you, my dear... I was afraid that i would die if you say "NO" for me... Because you had lot of reasons to say NO instead of YES..
You dont know me in person, We have never talked, and you dont even know my face... and so on...
But apart from all these, I loved you, i do and I will... till my heart stops beating... even after so many pains in joy, insults in victory, n critics filled with, te reason why my college life s still a golden memory is, doubtlessly.. U.. how can i forget te days i come regularly t temple not t pray god, but to see u... especially when 'm lil down...
Whenever I get into a problem or whenever I face a hard time or critics, its not those situations which make me worry, but te fact tat, u're not wit me at tos situations...
... te reason fr which i left te office early on te day f leavin t japan s known only t me... te first wound n my heart.. ever lasting pain.. but i kno tat I'm te only reason for all that happened! even now, i'm not sure whether u kno abt me n te amount f crush i hav on u... but... u're te one who god sent for me.. i've missed u.. i don kno whether i'll reach hights without ur presence nearby me... but ur memories will be wit me... after all, life goes on as if never ends...
i always hav a lacuna in my life tat, i dont hav a true n dearest friend who stays as same till my last breath.. I had tat feel when i saw u fr te first time itself.. coz, naturally its only a girl who can stay wit a guy till end f life .. i saw a face which i dreamt of for yrs t be my girl... tat was you, my dear.. tats wy i told, you're te one who god sent for me... I still remember te very first word i talked wit u when i saw u fr te first time... "Enna achu??" i kno.. you don't remember tat anymore.. but jus remember tat ther's always a guy waiting for u wit his heart open.. t hold you whenever you're down, whenever u feel bad or alone...
may be you don kno... i organised for NSS inauguration to take a group foto wid u... gave certificates to write to see u.. to talk wit u.. 've done so many crazy things.. but i never did anything tat may intend u tat i wanna b wit u till my last breath.. tats te biggest mistake i made in my life... may be....
...I've prayed manytimes for you, tat u should never disappoint ur parents n getaway... not even a single time tat u should make my life... i did tat without any intention..
coz i thought u too as a part f me.. i've never seen u as an individual.. u're my best half... but now, i feel really bad for not doing so... i should've prayed tat i u should sculpture my life.. but what else could be done now, other than thinking of you...
i look at lot of beautiful and glamarous girls here, in japan.. but i couldn't even look at tem patiently... this wasn't te case befor feelin te shock... until tis moment you 're te only one who can make me to fantasise about.. who can make me to write poems on.. huh.. u made me almost mad my girl... otherwise i would've not been pennin tis mail.. which has no to id and never gonna be posted...
but, no way other than sharing these things to myeslf!! t whom else i can share with?? told u na.. u're te only one i could share each n everything... but u're not wid me..
what else i can do... i don kno whether its right or not.. i don wanna argue on that either...
okie.. i've talked too much.. so many things... usually ppl say sharing sorrows wil reduce ur burdon.. but, here u hav'nt taken my burdons yet.. so, its gettin doubled...
leaving wit tears of blood in heart....

தேவதைப் பெண்ணும் அப்பாவி நானும்...!!!

உன்னோடு நான் வாழும் ஒரு யுகமும் ஒரு கணமே
நீயின்றி நான்
சாகும் ஒரு கணமும் ஒரு யுகமே
யுகங்கள் பல கழிந்த பின்பும்
கணங்கள் தேடி
கணங்கள் தேடி நகர்கிறதே
என் வாழ்க்கை
உன்னைக் கண்ட நொடி நினைத்து
தகர்கிறதே என் இதயம்...

மனமெங்கும் அவள் ஆட
என் இதயம் ஜதிபோட,
அவள் விழிகள் நான் தேட
உருண்டோடும் என் வாழ்க்கை

கண்களைப் பறித்தாள்
காதலைத் தந்தாள்
இதயத்தைப் பறித்தாள்
கவிதையைத் தந்தாள்

என் கண்களில் நீ விழுந்தாய்
இதயத்தில் பூ பூத்தது
என் காதலை வேண்டாமென்றாய்
என் கல்லறையில் பூ பூத்தது

நான் மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் என் நினைவில் வந்து கொல்கிறாயே,
பெண்ணே..
என்னை என்ன செய்ய சொல்கிறாய்..
என் அனுமதி இன்றி என் பார்வையில் பட்டு உயிரில் கலந்தவளே..
உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு மரண வேதனையை அளிக்கிறதே..
தேவதைகளும் உயிர் பறிக்குமா!!
கதைகளிலும் கேட்டறியாத அதிசய பயங்கரமே..
இரு விழிகளால் உயிர் தின்று, இன்மொழியால் எனைக்கொன்றவளே..
முதலும் இறுதியுமாய்க் கேட்கிறேன்..
உன் மனதை தந்துவிடு, இல்லையேல் என்னுயிரை எடுத்து விடு...


என் கவிதைகள்... என் உணர்வுகள்..




கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவிபாடியதாம் காதல் வந்ததால்...
வருந்தினேன் நான் பாடவில்லையென..
சட்டென உறைத்தது அட மடையா!!
அவள் பெயரை விட
அழகிய கவிதை உலகில் ஏதடா...!!

நீ பேசுவதைக் கேட்கும் முன்னரே
அதற்கு சுந்தர தெலுங்கு என
புனை கூறிய பாரதி
கவிஞனா கடவுளா!!!??

உன்னை ஒவ்வொரு முறை பார்த்த போதும் என் இதயம் பல நூறாய் சிதறியது ... இப்போதெல்லாம் நான் உன்னை பார்ப்பதுமில்லை, என் இதயம் சிதறுவதுமில்லை... ஆனாலும் அப்போதெல்லாம் இல்லாத ஒரு வலி என் மனதை சிதைக்கிறதே.. பெண்ணே, உன்னை விட உன் நினைவுகள் என்னை மிகவும் காயப்படுத்துகின்றன....

காதலும் ஒரு வகைத் துறவறம்தான்...
"நான்", "என்னை" எனும் சொற்களையே மறக்கச் செய்கிறதே...!!!

இரண்டாம் தாய்
அழ மட்டுமே தெரிந்த ஒருவனை
பேச வைத்தால்(ள்) தாய்...
பேச மட்டுமே தெரிந்த அவனைக்
கவிஞனாக்கினால்(ள்) காதலி..

என்னால் இப்போதெல்லாம் வானவில்லை ரசிக்க முடிவதில்லை..
ஏன் தெரியுமா என் அன்பே...!
நீ வழக்கமாக அணியும் கத்தரிப்பூ நிற சுடிதார்..
அதற்குப் பொருத்தமாக அணியும் கருநீல நிற வளையல்கள்...
உன் கண்களில் நான் ரசிக்கும் வெளிர் நீல வானம்...
அன்றொரு மழை நாளில் நீ தாங்கிய கரும் பச்சை நிற பூபோட்ட குடை..
எப்போதும் நீ சுமக்கும் மஞ்சள் நிற பென்சில் பௌச்..
அதிசயமாக உதட்டுச்சாயம் பூசும்போது உன்
கன்னக்கதுப்புகளில் ததும்பும் ஆரஞ்சு நிற வெட்கம்..
என்னை உன்னிடம் முதன்முதலில் ஈர்த்த செந்நிற கண்களிடை குங்குமம்...
இவற்றையே ஞாபகப்படுத்தி என்னைக் கொல்கிறதே....!!

உன்னை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் என் இதயம் பல நூறாய் சிதறுகின்றது... வியக்கிறேன்..
அதில் இருக்கும் நீ மட்டும்
சிறிது தேஜஸ் கூட குறையாமல் இருப்பது கண்டு...!!!

அ வ ள் . .
காந்தம் கண்களில்
யவ்வனம் அழகினில்
த்வாலை நடையினில்
ரிதம் பேச்சினில்...

பெண்ணே... எச்சரிக்கையாயிரு...
நீ பேசும்போது உன் கண்களும் கைகளும்
பிடிக்கும் அபிநயங்கள் கண்டு
ரம்பைக்கும் ஊர்வசிக்கும்
உன் மீது பொறாமையாம்...

நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றேன் அவளிடம். .
நீ யார் என்றால் அவள் என்னிடம்...
பாவம்..
அதைக் கேட்கத்தான் நானும் வந்தேன் அவளிடம்
என்பதை அறியாதவள்..

அவள் முகம் கண்டால் மனம் குதித்தாடும்
அவள் குரல் கேட்டால் சித்தம் பிசகிவிடும்
அவள் நடை பார்த்தால் கை ஜதிபோடும்
அவள் கைகோர்த்தால் உயிர் பிரிந்தோடும்..
அவள் மனம் திறந்தால் ஜென்மப் பலனடையும்...

என் உயிரில் கலந்த அவளை மறக்க நினைக்கிறேன் என் உயிர் பிரியாமல் அது நடக்காது எனும் உண்மையையும் மறந்து...

இறுதி ஆசைகள்..
பெண்ணே.. நான் இறந்த பின்பாவது உன் இதயத்தில் எனக்கொரு இடம் கொடு...
காதலுடன் இல்லாவிட்டாலும், கல்லறையாகவாவது...
மனிதர்களே! மலர் தூவுங்கள் என்னவள் மீது என் நினைவு நாளில்...
என்னுயிர் நிரந்தரமாக உறைந்திருக்கும் கல்லறை அவள் இதயமல்லவா...