Wednesday 1 September, 2010

அவள்...


கண் கலந்து உளம் கனிந்து
கண்ட கனவுகள் மறப்பதில்லை...
புதைத்த நினைவுகளின் புகையும் நறுமணம்
நாசியை விட்டகலுவதுமில்லை...
எப்போதேனும் ஓர் கணம்
எங்கேனும் ஓர் இடம்
அவள் தடம் பற்றி
மரண வாயிலின் தாழ்நீக்கும்
தருணங்களுக்கும் குறைவில்லை...
பெயர் கேட்ட மாத்திரத்திலும்
விழிபார்த்த ஓர் கணத்திலும்
உயிர்பறிக்கும் அவள் ஜாலங்களும் குறைவதுமில்லை...
நொடிக்கொருமுறை அவள் பெயரைத் துதிக்கும்
இதயம் ஏனோ நின்று தொலைப்பதுமில்லை!!

1 comment:

  1. மச்சி.. போட்டோ மிகப் பொருத்தம் போ....

    ReplyDelete