Friday 31 May, 2013

விதை


செயலின்மையின் இனிய மதுவினைப் புட்டியுடன்
சற்று புகட்டி
கால்கள் தள்ளாட, கருவிழி கிறங்கிச் சொறுகிய பொழுதில்
கோழைமையின் கடிந்த விஷத்தினை அதில் இட்டு நிரப்பி
புட்டியைக் கவிழ்த்து
நெஞ்சம் எரித்த பின்னும்
அதன் உள்ளே வைத்த கனவின் விதையைப்
பசுமை போர்த்துக் காத்த
கொடியவன் நெஞ்சினுள் கரத்தினை செலுத்தி
விதையினை வேருடன் உருவிப் புதைக்கும்
பாரத தேசம் இப்பார் போற்றும் தேசம் என்பாம்

No comments:

Post a Comment