Friday 6 August, 2010

தீவிரவாதி



ஒரு மெல்லிய சாரலுடன் முடிவுக்கு வந்தது எனது அந்த வியாழக்கிழமை அலுவலக நேரம்.. சுமார் பன்னிரு மணி நேரங்களை என் வாழ்நாளில் இருந்து பறிகொடுத்துவிட்டு,ஐநூறு ரூபாய்
பணம் வாங்கி வந்து வயிற்றைக் கழுவும் ஒரு சாமான்யன் நான். இரவு சுமார் ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருந்து நடந்து வீடு வந்து சேர்கையில் அறை
நண்பர்கள் யாவரும் துயிற்தாயின் மடியில்..வந்தவுடன் உறங்கப் பிடிக்காமல் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன்..
“…க்காகவும், உங்க friends எல்லாருக்காகவும் அடுத்த song.. நான் நடந்தா அதிரடி… என் பேச்சு சரவெடி.. என்னை சுற்றும் காதல் வெடி நீ... நான் உந்தன்…..”
“என்ன மீனாக்ஷி இப்டி பண்ணிட்ட.. உனக்கு எவ்வளவு தரம் சொல்றது!? அவன் விஷயத்துல விளையாடாத விளயாடாதனு.. இப்போ பாரு, பத்து வயசுன்னு கூட பார்க்காம பச்ச கொழந்தைய தூக்கிட்டு போய்ட்டான்.. இப்போ என்ன பண்ண போறோம் கடவுளே!!!.. என்னங்க.. நீங்களே இப்டி….. “
“தன இணையைக் கொன்ற சிறுவனை பழி வாங்க வீடு தேடி வந்த நல்ல பாம்பு..உயிரை உறைய வைக்கும் உண்மை!! நடந்தது என்ன!!?.. ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு… அம்மன் T R Y முறுக்குக் கம்பிகள் வழங்..”
நம் தமிழ் தொலைக்காட்சிகள் எல்லாமே எரிச்சல் தர,சட்டென ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு மாறினேன்..

“அடுத்து வரும் செய்திகள்.. இந்திய கலாசாரத்தை அவமதிக்கிறதா TIME பத்திரிகை? சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு... boys always like less…. AXE now, costs less... now just for hundred and twe….”

“the meaning of being lonely.. is this the feeling I need to walk with….tell don’t me why… I cant be there. Where you are… there’s something missing in ma….”

“அந்த மாத இதழின் ஜூலை மாத பதிப்பில், my own private India எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு நகைச்சுவைக் கட்டுரை,அமெரிக்காவாழ் இந்தியர்களிடையே பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்திய கலாசாரத்தையும்,வழிபாட்டு முறைகளையும் கேலி செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு தொடர்கிறது பல வருடங்களாக அங்கே வசிக்கும் மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல தரப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள….”
“அது வேற ஒரு நாடு, இப்போ காஷ்மீர் பிரச்சனைய நாங்க பார்த்துக்கரோம்னு சொன்னா அமெரிக்காவ நாம அனுமதிப்போமா, அதே மாதிரிதான் இலங்கையும், அது இலங்கையோட உள்நாட்டுப் பிரச்சனை, அதுல நாம எப்படி தலையிட முடியு…. “
“ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் தொடர்ந்து வருவது குறித்து நம் வெளியுறவுத் துறை அமைச்சர் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக விரைவில் ஆஸ்திரேலிய அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரி… “
“கதையல்ல.. கறுப்பு சரித்திரம்… ஒரு ஒட்டு மொத்த கிராமத்தையே கடலுக்குள் புதைத்து விட்ட குற்ற.....”
“நான்கு கரங்களையும், துதிக்கையும் உள்ள உருவத்தைக் கடவுள் என வழிபடுபவர்களை எப்படி புத்திசாலி என எடுத்துக் கொள்வது!? என்பது போன்ற சொற்கள் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மனதை மிகவும் புண்படுத்துவதாகவும், இந்தியாவின் பெரும்பான்மை மதமான இந்து மதத்தை அவமதிப்பதாகவும் இருப்பதாக கொதித்துப் போய் இருக்கின்றனர்..இதற்கு அடுத்த இதழில் TIMES பத்திரிகை மன்னிப்பு கேட்டிருந்தாலும், வெளியிட்டது மாபெரும் தவறு என்பதே பெரும்பாலான இந்தியர்களின் கருத்தாக….”
“ராஜா சோழன் எடுப்பித்த தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆனதை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என பல சமூகஆர்வ தொண்டு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.. ராஜ ராஜ சோழன் ஆட்சி காலம் தமிழர்களின் பொற்காலம் என பொதுவாக
வரலாற்று ஆய்வாளர்களிடையே அழைக்கப்படுகிறது… இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்து, இலங்கை, லட்ச, மினிக்காய் மற்றும் அந்தமான் தீவுகளையும் சோழர் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்த சக்தி வாய்ந்த கடற்படையை அவர் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்….”
“...சிவகாமி…நாய் நம்மைப் பார்த்து குரைக்குதுன்றதுக்காக, நாம அதா பாத்து குரைக்க முடியமா?? இல்ல அது நம்மள பார்த்து குரைக்கிரதுனால நாம திருடன்னுஆயிடுமோ!??.."
“...களின் தொடக்கத்தில் சில மருத்துவர்கள் எங்கள் நகரத்துக்கு வந்த பொழுது நாங்கள் இந்தியர்கள் அனைவரும் புத்திசாலிகள் என நினைத்திருந்தோம்.. பிறகு, அவர்கள் தம் வியாபாரி உறவினர்களைக் கொண்டு வந்த பொது, நாம் நினைத்த அளவு புத்திசாலிகள் அவர்கள் இல்லை என நினைத்தோம்.. அதன் பிறகு, வாடகை ஊருந்து ஓட்டும் உறவினர்களையும் கூட்டி வந்த பொழுது, இந்தியா ஏன் இன்னும் ஏழை நாடாக இருக்கிறது என அறிந்து கொண்டோம்… கட்டுரையின் இந்த பகுதி தங்கள் மனதை மிகவும் புண்படுத்துவதாய் இருப்பதாக வெகுண்டெழுந்துள்ளனர்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள்…”
“கொடு எங்கள் நாடே.. கடல் வாசல் தெளிக்கும் வீடே.. பனைமரக் காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா… முகத்தில் புன்னகை எரிப்போம், உடம்பை உயிருக்குள் புதைத்தோம்… வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோ…..”
சட்டென மின்சாரம் நின்று எங்கும் அந்தகாரம் சூழ, என் விழிகளில் இருந்து இருதுளி நீர் தெறித்தது… நான் பிரிவினைவாதியா? தீவிரவாதியா?
தேசவிரோதியா?? இல்லை மனிதனா!?? கேள்விக்கு விடை தெரியும் முன்னரே உறங்கிப் போனேன்…..

1 comment:

  1. ஒரு நாட்டின் கௌரவத்தை தலைநிமிரச்செய்யும் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிப்பதற்க்கு முன்னரே ஊழல் புகார்கள்; வேலைகள் இன்னும் முடியவே இல்லை. ஆனா ”நடத்தி கிழித்துவிடுவோம்”னு வெட்டி பந்தா..

    இனிமே தோண்டினா, பூமியோட அடுத்த பக்கமே வந்துடும்னு தெரிஞ்சும் எல்லாருடைய ஆசியோட சுரங்கத் தொழில் கொடிகட்டி பறக்குது..

    //நீ பிரிவினைவாதியா? தீவிரவாதியா?
    தேசவிரோதியா?? இல்லை மனிதனா!??// --- தெரியலியேப்பா...ஆ..ஆ....ஆஅ......

    ReplyDelete