Tuesday 3 April, 2012

முதலிர(லுற)வுகள்

மூடிய கதவின்


இடுக்கில் வழியும் மஞ்சள் விளக்கின் எஞ்சிய ஒளியில்

மெத்தென்ற விரிப்பும் உர்ர் எனும் செயற்கைக் குளிரும்

நிறைந்த அறையில்

விரிப்பின் அடியில் பதுங்கிய உடல்களின்

இதழ்கள் பேசும் வரியற்ற மொழியில்...

விழிகள் மூடும் நாணம் கொண்டு

கன்னம் சிவக்கும் வெட்க உச்சம்

இதழ்கள் கவ்வி

உடைகள் களைந்து

விரல்கள் கோர்த்து

யாக்கை கொண்டு யாவும் பேசி

உச்சம் அடைந்து

அயர்ந்து அடங்கி

அணைத்து உறங்கிப்

பின் துயிலெழுதல்

என்றே நடக்கும் முதலிர(லுற)வுகள்

ஏனோ

இப்போதெல்லாம் பெரும்பாலும்

அலைபேசியில் மின்காந்த அலைகளினூடேயே

நடக்கின்றன...

2 comments:

  1. வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்...

    ReplyDelete
  2. கவிதை மிக நன்று!

    ReplyDelete