
கண்ணிரண்டும் கண்ணிரண்டும் உன்னைக் கண்டதே
நெஞ்சமதோ அக்கணமே காதல் கொண்டதே
என்னுள்ளே நீயும் நுழைந்தாயடி
உனைக்கண்ட நானோ உறைந்தேனடி
விழி வழியே நுழையும் மொழி காதலென்று ஆனதிங்கு..
என்புருக்கி எனை எரிக்கும் கண்களல்லவா
தமிழ் மொழியும் இன்பமுறும் இதழ்களல்லவா
இதயம் மட்டும் ஏனோ கல்லானதே
என் காதல் நுழையா சுவரானதே
மனதில் என்றும் நீ இருக்க நானும் இங்கு தினம் பிறக்க..
கண்ணிரண்டும் கண்ணிரண்டும் உன்னைக் கண்டதே
நெஞ்சமதோ அக்கணமே காதல் கொண்டதே
No comments:
Post a Comment