Friday 28 August, 2009

உன் நினைவுகள்

பல நேரங்களில் என்னுள் கவிதையை விதைத்த
உன் நினைவுகள்
இப்பொழுதெல்லாம் மௌனத்தையே விதைக்கின்றது
பேச திராணியின்றி
நா வறண்டு
இருக்கும் இடத்தை விட்டு அசையாமல்
ஒரு தியான நிலைக்கு செல்லச் செய்கிறது
உன் நினைவு..
என் கனவே
என் நினைவே
முடிந்ததா என் காதல் கதையும் இறுதியில்!!
உன் கால்கொலுசின் மணியில் துவங்கிய என் காதல்
ஆண்டு பல ஆகியும் அங்கேயே இருக்கிறது...
அதை ஒருமுறையேனும் நீ எடுத்து தூசி தட்டி
என்னை தன்யனாக்குவாய் எனும்
நம்பிக்கை கூட இப்போதெல்லாம் என்னை விட்டு நீங்கத் தொடங்கிவிட்டது.. நம்பிக்கையில்லா மனிதன் நடைபிணம்..!!!
உணர்கிறேன் இன்று நான் அதையும்...
என் வாழ்வில்
சகலத்தையும் எனக்கு கற்றுக்கொடுக்கிறாயே பெண்ணே...
அதுவும் வெறும் நினைவுகள் மூலமாகவே!!!
நீ தேவதை மட்டுமல்ல.. தெய்வமும் கூட..

No comments:

Post a Comment