Sunday 9 August, 2009

நீயின்றி நானில்லை...

உன்மேல் காதல்கொண்டு
என் உயிரை நானும் வெறுத்திருந்த
காலங்கள் யாவும் கனவாய்ப்போனதே...
கால வெள்ளத்தின் ஓட்டத்தில்
ஒருவேளை நான் உன்னை மறந்துபோகக் கூடுமோ!?!
என்ற எண்ணம் மனதில் எழும் நேரம் யாவும்
சட்டென நினைவுபடுத்தும்
துடிக்கும் இதயம்
நீயின்றி நானில்லை...

No comments:

Post a Comment