Sunday 8 November, 2009

மணிமேகலை...3 உயிர் கொண்ட தோழன்...





உயிரினும் மேலான தமையன் - அவன்
முதுகில் குத்திய கொடும்பாவி
தன் குலம் கெடுக்க வந்த கோடரிக் காம்பு
மனமே அவன் எண்ணம் நீங்கு..
மனதோடு போரிட்டாள் வீரமங்கை
தன் குலப்பெருமை காக்க

அறியாச் சிறுமி...
ஆயிரம் போர்க்களங்கள் காண்பதிலும்
பதினாயிரம் சத்ருக்களைக் கொல்வதிலும்
மிகக் கடியது இறைவன் திருவடி சேர்வது...
அதனினும் கடிது - காதல் கொண்ட
நெஞ்சத்தின் நினைவுகளை அழிப்பது

கனவிலும் அவனே நினைவிலும் அவனே
வெட்கம் அறியா எனக்கு நிலமகளைக் காட்டியவன்
தேவரும் போற்றும் வாணன், வந்திய தேவன்...

புவி மீது பூத்திருக்கும் மலர்கள் கோடி
ரசித்ததில்லை தம் எழிழழகை..
கார்குழலும் மான்விழியும்
தேன் சொரியும் அதரங்களும்
கலந்து செய்த தன் எழிலை கண்டு காட்டிய கண்ணாடியில்
சட்டென உதித்தான் ஆதவன்!

ஒ! அல்ல.. அவன் என் காதலன்..
கனவில் வந்து மனம் அணைத்த கள்வா!!
நினைவிலும் எனை முத்தமிட ஆசையோ..
உன்னை மறவேன் அல்லால் என் உயிர் துறப்பேன்..
மனம் மருகினாள் மணிமேகலை..

கண்ணிமைத்தும் மறையவில்லை காதலன்!
நான் காண்பதென்ன நினைவா!!ஊ!!
குயில் கூவியது கன்னியவள் வடிவத்தில்
சட்டென கலைந்தது நினைவு..

கதவம் மூடினான் வல்லவரையன்
தன இதயம் பதறினான் ஒரு கணம்
ஒருபுறம் கொலைவாள்! மறுபுறம் கன்னியவள் விழி வாள்!!
சமைந்தான் சிலையென குரங்கின் பின்புறம்
மூதாதையிடம் அறிவுரை கேட்கும் நோக்கோடு!?

நினைவிலும் கொலை செய்ய தொடங்கிவிட்ட கள்வா
உன்னை காணாது இனி எனக்கில்லை உறக்கம்..
சந்திரமதி ! வாடி, காண்போம் என் பதி

நுழைந்தாள் வேட்டை மண்டபத்தில் ஒரு புயலென
கைவிளக்கேந்திய காரிகையாய் சந்திரமதி அவள் உடன் இருக்க
சிலைகளே விழித்தன அசையும் சிலை கண்டு
வாணன் என்ன செய்வான் பாவம்.. அவனும் விழித்தனன்..
பின் உறைந்தனன், உறைந்தன சிலையென..

கள்வனைக் காணாத ஏக்கம் அமைதி அவ்விடம்
சட்டென கலைத்தான் கொடும்பாவி – இடும்பன் காரி
தேவதை இல்லம் திரும்ப – பின் ஓடி வந்தான்
அவள் இடம் தேடி – கொலைவாளை வெறுத்து
விழி வாளை நாடி – வாணன் வந்திய தேவன்

தன காதலன் உயிர் காக்க தமையன் மானமும் காக்க
தந்தாள் ஓர் புகலிடம் - அது யாழ்க்கலஞ்சியம்
கண்டதும் உணர்ந்தான் கொலை வாளினும் கொடிது
மேகலை விழி வாள் – அதன் வழி விலகலே
உத்தமம் – அதுவே யாம் குந்தவைக்கு செய்த சத்தியம்
அகன்றான் அவ்விடம் ; விரைந்தான் தன் அரசனிடம்

நந்தினி..

மீன்கள் ரெண்டிணைந்து அவள் கண்களானதே
கன்னி அவள் கால்களோ வாழைத் தண்டானதே
தேவலோக மங்கையவள் இதழ்கள் ரெண்டோ
மது சொரியும் மலர் செண்டானதே
அதை நாடி வந்து மயங்கும் ஆடவர் வண்டானரே..

பார்போற்றும் வேந்தர் சுந்தர சோழரும்
போற்றி வணங்கும் தனாதிகாரி - தன்
மனம் கிறங்கி மணந்தார் சர்ப்பமொன்றை

வேங்கையின் காலைச் சுற்றி தன் வன்மம் கக்கி
அதன் உயிர் பிரிக்கும் உறுதி கொண்டாள் நந்தினி
அவள் வேல் விழியில் தன் உயிர் மறந்தார் பேரரையர்

பட்டத்து இளவரசன் – வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி
வேங்கையின் விழிகள் சிறுத்தையின் பாய்ச்சல்
சிம்மத்தின் கர்ச்சனை இவை யாவும் நாட்டில் காண
பாரீர் எம் ஆதித்த கரிகாலனை..

அந்தோ பரிதாபம்!
அவனும் மயங்கினான் அந்த நாக கன்னியிடத்தில்
ஒத்துத் தலையசைத்தான் கருநாக விடம் அருந்த
வந்தான் சம்புவரையர் இல்லம் தேடி..
காலனவன் அருள் நாடி

No comments:

Post a Comment