Tuesday 15 February, 2011

காதல்...

விழிஎன்னும் ஈரெழுத்துச் சொல்லில் தொடங்கி
இதயமெனும் நான்கெழுத்தில் முடியும் அழகிய கவிதை... காதல்...

நெடுங்காலம் விழி சுவைத்து
ஊர்பார்க்க விரல் கோர்த்து
ரகசியமாய் தோள் உரசி
செவிநிறைய உன், என், நம் கதை பொழிந்து
தெரு நனைத்த மழைநாளில்
நின் இன் முத்தச் சாரலில் என் உயிர் நனைத்து
உயிர் பூத்திட்ட ரோஜாப்பூ தருணங்களில் இல்லை
மனம் அறுத்துப் பிரிந்த பின்னால்
உன், என் பெயர் பார்த்த ஒரு கணத்தில்
நம் விழி உதிர்க்கும் இருதுளிக் கண்ணீரில்
உயிர்த்திருக்கும் உன், என், நம் காதல்....

2 comments:

  1. உன், என், நம்... கலக்கல்...

    ReplyDelete
  2. உயிர்த்திருக்கும் உன், என், நம் காதல்....

    ReplyDelete