Saturday 7 May, 2011

புணர்தலும் புரிதலும்!~!

குளிரூட்டப்பட்ட பேரங்காடியின்
ஜனத் திரள்களுக்கு நடுவே
இரு விழியெனும் வாள் கொண்டு
கண்கள் விரியச் சிரித்துத் திரிந்திருந்த
குமரிகளின் சதை ரசித்துத் திரும்பிய
ஓர்நாள் மாலை நேரம்
மனதின் உள்ளே இருந்த ஏதோ ஒன்றை
வெகு இயல்பாக அறுத்துப்போட்டது
நடுத்தெருவில் புணர்தல் நிமித்தம்
பின்தொடர்ந்த ஆண் நாயின்
புறம் நோக்கி வள்ளென மெலிதாய் ஒரு முறைப்பு தந்த
பெட்டை நாயும், அது கண்ட உடன்
தலைகுனிந்து பின்வாங்கி அதன் வழி விலகிய அந்த ஆண் நாயும்...

No comments:

Post a Comment