Friday 1 July, 2011

கிராமியக் காதல்!!

ஊரடங்கும் சாயுங்காலம்

உன்ன நானும் பார்க்க வேணும்

பாயும் அந்த ஓடை போல

மனசு கெடந்து குதிக்கும்

நீ பூவை கிள்ளி போடும் போது

அதுக்கும் சாகப் பிடிக்கும் ...

நீ பூவை கிள்ளி போடும் போது

அதுக்கும் மோட்சம் கெடைக்கும்...

அய்யனாரு கோயிலோரம்

நீயும் நானும் அந்தி நேரம்

கைப்பிடிச்சு கொஞ்ச நேரம்

கொஞ்சி பேசும் அந்த நேரம்

ஏழு மலை மாமன் தாண்டுவேன்

மாமன் பொண்ணே உன்ன கைப்பிடிச்சா

ஏழு ஊரு நானும் வெல்லுவேன்....


ஊரடங்கும் சாயுங்காலம்

உன்ன நானும் பார்க்க வேணும்

பாயும் அந்த ஓடை போல

மனசு கெடந்து குதிக்கும்

நீ பூவை கிள்ளி போடும் போது

அதுக்கும் மோட்சம் கெடைக்கும்...

நீ பூவை கிள்ளி போடும் போது

அதுக்கும் சாகப் பிடிக்கும் ...


No comments:

Post a Comment