Sunday 8 May, 2011

முதற்காதல்

தரையில் நடந்த கால்களில்
புதியதாய் ரெண்டு இறக்கைகள்

கோபுர விளக்காய் பளீரிடும்
கண்கள்

காரணமின்றி சிரித்திருக்கும்
கிறக்கம்

அவள் மட்டுமல்ல;
அவளின் வகுப்பறையைக்
கடக்கும்போதும்
துடிப்பெகிறும் இதயம்

அவளின் நிழல்மட்டும் கண்டால்கூட
கூத்தாடும் நெஞ்சம்

வருடங்கள் பல ஓடியும்
அவளின் பெயர் நினைத்த ஓர் கணத்தில்
கட்டி இழுத்து
புதைக்கப்பட்டுவிட்ட நினைவுகளின்
துவாரத்தினூடே இழுத்துச் சென்று
நிதம் கொல்லும்

ஒத்துக் கொள்கிறேன்
இதயம் கலந்து
உயிரோடு உறைந்து விடும்
முதற்காதல்

மரணபரியந்தமும்!~!

1 comment:

  1. NANDA how lucky that girl is. still she lives in ur heart.if the love suceeds we cant get good poems.isn't it?

    ReplyDelete