Friday 3 July, 2009

தாய்மை எனப்படுவது யாதெனில்...

ஆணோடு பெண் சேரும் ஆனந்தவேளை
அன்றோடு முடியுமந்த ஆணின் கவலை
பெண்ணெனும் பேதை தொடர்வாள்
வாழ்வெனும் பயணத்தில்
இன்னுமோர் தொடக்கம்...
ஐயிரண்டு திங்கள் தன்வாழ்க்கை கழிப்பாள்
குருதியுடன் இணைந்த குழவியும் கலந்து..
உதிரம் உருக்கி வளர்ப்பாள்
தன உணவும் ஊட்டி வளர்ப்பாள்...
முன்னூறு தினம்சென்று மூச்சடக்கி உயிர்ப்பாள்..
மகனோடு தாயென்று மீண்டும் பிறப்பாள்...

No comments:

Post a Comment