
காலங்கள் மாறலாம்,
உன் மனமும் இளகலாம்
ஒருவேளை அன்று நம் இருவருக்கும்
இடையேயான இடைவெளி நிரப்பப்பட
முடியாததாய் மாறிவிட்டதாக நீ வருந்தலாம்..
ஆனால், கல்லறைக்குள் புகும்
கடைசி மணித்துளி வரை என் கரம்
உனக்காக நீட்டியபடியே இருக்கும்
எனை நீ காதலுடன் பார்க்கும்
அந்த கணத்தில்
உன்விழிநீரை துடைக்கும் ஆசையில்..
No comments:
Post a Comment