Thursday 21 May, 2009

தீபாவளிக் காலை

அம்மா தலைக்கு எண்ணெய் தேய்க்க
அப்பா புத்தாடைகளுக்கு மஞ்சள் பூச
ஏதோ ஒரு டிவியில் சாலமன் பாப்பையா
பட்டிமன்றம் பார்த்து சிரித்துக் கொண்டே
அழகாய்ப் போன தீபாவளிக் காலையில்
சட்டென நண்பன் குரல்..
மச்சி எந்திரிடா, சீக்கிரம் ஆபீஸ் போகணும்
இன்னைக்கு கோட் சப்மிசன் டே...
தொலைத்த சந்தோஷங்களை மனதுக்குள் தொலைத்துக் கொண்டே
நண்பனுடன் ஆபீஸ் கிளம்பினேன் என்றும் போல..
அவன் கடைவிழியிலும் ஒருதுளிக் கண்ணீர்!!!!

No comments:

Post a Comment