காதல் வந்தால் வீரம் வரும் என்றானே ..
என்னைக் கோழையாக அல்லவா அடித்திருக்கிறது..
சரி, போகட்டும் அவனை மன்னிக்கிறேன்
உன்னை அவன் பார்த்ததில்லையாமே..
கம்பன் மீது பொறாமை எனக்கு..
நீ இல்லாத காலத்தில்
காதலைப் பார்த்து நிம்மதியைத் தேடிக் கொண்டானே...
கம்பனைப் பற்றிய வியப்பு எனக்கு...!!
நீ இல்லாத காலத்தில் எப்படி
அவனால் காதலை இவ்வளவு
அழகாக வடிக்க முடிந்தது..!?
ஒத்துக் கொள்கிறேன்,
கம்பன் உன்னைப் பார்த்ததில்லை...
தேவதைகளைப் பற்றிய கவிதை
அவன் ஒன்றுமே எழுதவில்லையே...
No comments:
Post a Comment