Sunday 3 May, 2009

காதலே..


என் கண் தொட்ட அன்றே என் இதயம் தொட்டவள்
என் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு
அப்பாவியாய் நின்றவள்... 
என் வாசல்வரை வந்தவள் 
ஏனோ என் இதயக்கதவை
திறந்து பார்க்காமலே சென்றுவிட்டாள்
பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்
அதனுள் இருந்த அவள் உருவம்
இன்னும் உற்றுப்பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்
அதனுள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் என் இதயமும்...  
ஏனோ தெரியவில்லை சிறகில்லா தேவதைகள்கூட 
மானுடர்களைக் கண்டுகொள்வதில்லை 
ஏதுமறியா என்னைக் கவிஞனாக்கியவளே.. 
இறுதிவரை நீ என்னை உன் காதலனாக்க மாட்டாயோ!!? 
சரி விடு... நன்றிகள் கோடி உனக்கு
ஒரு தமிழ்க்காதலனாய் என்னை ஆக்கியதற்கு...  
கல்லறை செல்லும் வரையில் 
உன் நினைவுகளில்
கவிதை வடிப்பது ஒன்றே போதும் எனக்கு...

காதலே.. 
கல்லறைக்குச் செல்லும் பாதையை நோக்கி
காத்திருக்கும் கவிஞன் பேசுகிறேன்..  
இப்போதாவது என் மனம் அழும் குரல் உன் செவிகளில் விழுகிறதா?  
காதலை வெறுத்த எனக்கு ஒரு தேவதையைக் காட்டி காதலை உணர்த்தினாய்...  
அவளோ என் காதலை மறுத்து மௌனம் சாதித்து எனக்கு மரணத்தை உணர்த்தினாள்... விளங்காது விழிக்கிறேன், 
இன்னும் எதை உணர்த்துவதற்காக என்னை உயிருடன் விட்டுவைத்திருக்கிறாய்...

No comments:

Post a Comment