Tuesday, 8 September 2009

நினைவில்லா இன்னோர் இரவு...

இரவின் நிலவு
உச்சி வானில் நிலத்துவிட்டபின்
ஒளி பீய்ச்சும் தானியங்கி இருசக்கர வாகனிகள்
கவலைகள் மறந்து (மறைத்து)
தத்தம் இரவுநேர தோழிகளுடன்
பறந்து கொண்டிருக்கும்
இன்னுமோர் இனிய நள்ளிரவு...
வழக்கம் போல்
தனிமையாய் நான்
தலைகலைந்து
மங்கிய விளக்கின் மஞ்சள் ஒளியில்
இளையராஜாவை மட்டும்
துணையாய்க் கொண்டு
அவளை எண்ணி பிதற்றும்
இன்னுமோர் இரவு
என்று விடியும் என் இரவு!!
என்றும்போல் கண்முன் நிற்கும்
மேலாளர் என்னை தூங்கச் சொல்கிறார்...
அவளோ என் இருவிழி இமைகளுக்கிடையில்
அதே மோகனப் புன்னகையுடன்...
என்றும்போல் இன்றும் பிறக்கிறது
காரணமின்றி விரல்களின் நுனியில்
ஓர் முடிவு தெரியா க(வி)தை

1 comment: