Wednesday 29 April, 2009

வாழ்வு!!


ஏற்றமில்லை தாழ்வுமில்லை
வாழ்க்கை ஓடத்தில் என்றும்
ஒட்டையுமில்லை
மனம்தான் பகை என்றாலும்
அது ஒரு நிலையில் இல்லை
சில நேரம் சிரிக்க வைக்கும்
சில நேரம் அழவும் வைக்கும் 
வாழ்க்கை ஓடத்தில் என்றும்
ஒட்டையுமில்லை
வெற்றி தரும் தோல்வி தரும்
வாழ்க்கை என்றும் பாடம் சொல்ல... 
இரண்டும் இன்றி போரும் இல்லா
வாழ்வில் என்றும் வெறுமை வரும்
பின்பு வெறுப்பும் வரும்.. 
கடவுள் செய்த பூமி என்றார்
அவனே என்றும் துணைவன் என்றால் 
பாழும் உலகில் மாந்தர் எதற்கு!!?? 
மனிதப் பிறவி எடுத்து வந்தோம்
இந்த மண்ணுக்கு 
மனமென்னும் தூரிகையால்
வாழ்வென்னும் ஓவியம் சொல்ல... 
தூரிகைதான் தூர்ந்ததென்றால் 
ஓவியமும் உதிர்ந்துவிடும்
அறிவீரே மானுடரே!!!

No comments:

Post a Comment