Friday 5 June, 2009

என் காதலி..

காதலும் கனவுகளும் கடவுளின் மறுவடிவமோ!!??
பல வலிகளுக்குப் பின்னால்தான் அடையமுடிகிறது!!!

மரணத்திற்குப் பின்பும் கவிதை வடிப்பேன் அவளுக்காக..
மெளனமாக!!!

முதல் பார்வையிலேயே உயிர் கொண்டவள்
காதல் நோய் ஏவி தினம் கொல்பவள்..
விழி மின்னலில் மனம் எரிப்பவள் ஆனால்
தேவதையின் முகம் கொண்டவள்..என் காதலி..

ஆதவன் விழியுடையாள்
அன்றில் மொழியுடையாள்
தாமரை முகமுடையாள் -அவள்
குழவியின் அகமுடையாள்
தேவதயுள் சிறகிலாள்
மலர்களுள் முள்ளிலாள்

No comments:

Post a Comment