மூச்செல்லாம் "என் தேவதை" எனும் பதம் இருக்க
எப்படிச் சொல்வேன் அதை நிறுத்தும் படி!
கலைஞனின் வலி கைத்தட்டலில் மறந்து போம்!
தாயின் வலி, பிள்ளையின் முதற் கதறலில் மறந்து போம்!
காத்திருப்பின் வலி, காதலியின் வருகையில் மறைந்து போம்!
கண்ணே! நீ வராமலே போனதன் வலி எங்ஙனம் மறந்து போம்!!!
என் கல்லறையிலேனும் சொல்லிடு உன் பதிலை....
No comments:
Post a Comment