Monday 22 February, 2010

ஏன்??

என் நெஞ்செல்லாம் காதல் நிரப்பி கண்முழுக்க வண்ணக் கனவுகளும் தெளித்துப்
பின் நெருப்பில் தள்ளியதேன் என் கண்ணே!!
கனவில் நான் கண்ட காட்டாறு கானலாய்ப் போனதேன்?
யாக்கையை இறகாக்கிக் குருதியை மையாக்கி நான் வடித்த கவிதைகள் யாவும்
நீர்த்துப் போனதேன்?
நாளொரு நீயும் இரவொரு விண்மீனுமாய் நான் வளர்த்த காதல்
காற்றில் கலந்ததுமேன்?
நிதமொரு துளியாய் நான் சேர்த்த நம்பிக்கைக் கூடு சிதைந்ததுமேன்?
சட்டென ஓர் கணத்தில் என் வாழ்வே பொய்த்துப் போனதுமேன்?
உயிர் முழுக்க நீயிருக்க வெறும் கூட்டில் நடைபிணமாய்
எனக்கிந்த வாழ்வும் ஏன்??
விழிவழிஒழுகும் கண்ணீரில் என்னுயிர் இன்னும் கரைந்து போகாததேன்!?
நீ மாற்றான் மனையாள் என்றறிந்தும் என்குலை இன்னும் அறுந்து போகாததுமேன்!??
ஒழிந்தான் ஓர் கவி!!!
வாழ்க பல்லாண்டு...

No comments:

Post a Comment