
வண்ணமிகு ஓவியமும்
மனம் கலைக்கும் ஒபியமும்
கலந்ததென்ன உன் முகத்தில்..
இருள் விலக்கும் அக ஒளியும்
கண்பறிக்கும் மின்னலதும்
சுமந்ததென்ன உன் விழியோ!
மணம் பரப்பும் மலர்வனமும்
கண்களிடை குங்குமமும்
பிணைந்ததுந்தன் செவ்விதழில்..
சேற்றலரும் செங்கமலம்
தாங்கி நிற்கும் தண்டதுவோ
ஆனதென்ன உன்னிடையாய்!!
கூடல்நகர் வெண்சங்கும்
பெருங்களிறின் தந்தமதும்
ஒன்றிணைந்த உன்கழுத்தில்
சோழனவன் செம்பொன்னும்
பாண்டியனின் வெண்முத்தும்
இழையச் செய்த பொற்தாலி
நான் சூட்டும்
நாள்வருமோ பைங்கிளியே!!!!
No comments:
Post a Comment