Wednesday, 15 April 2009

தேவதை


அன்றொரு நன்னாளும் அழகிய காலையும் 
எனக்கு அவளைக் காட்டின...
எல்லா நாளையும்போல் விடிந்த அந்த வெள்ளிக்கிழமையின் 
இரவுமுதல் தூக்கம் தொலைத்தது என் இதயம்
சமீபகாலமாக என் கண்களும்...
சாந்தமான தோற்றமும்
கவிதையும் ஓவியமும் கலந்த பேசும்
மின்னலும் தென்றலும் கலந்த புன்னகையுமாய் 
அவள் வளையவந்த அந்த நான்கு நாட்களைத்தான்
நான் தேவதைகள் தினமாகக் கொண்டாடினேன்...!!
அவளுக்கென்ன!! தேவதையல்லவா...!! அதனால் 
உணர்ச்சிகளும் இல்லை போலும்... ஆம் !
எந்த சலனமும் இன்றி பின் எப்படி என் இதயத்தைப் 
பறித்துச் செல்ல முடிந்தது அவளால்!!
இதயத்தைப் பறித்தால் காதலைத் தருவாள் என மகிழ்ந்திருந்தேன்
அவளோ எனக்குக் கல்லறையைக் காட்டி ஓடி மறைந்தாள்....

No comments:

Post a Comment