
மௌனமே மொழியாய்
வெட்கமே ஆடையாய்
நர்த்தனமே நடையாய்
வில் வீச்சே பார்வையாய்
மின்னலே புன்னகையாய்
தேவதையே பெண்ணுருவாய்
மலர்ந்ததிங்கே
மானுடரே பாரீர்! பாரீர்!
அசமஞ்சனையும் கவிஞனாக்கும்
பரதேசியையும் பட்டத்தரசனாக்கும்
கோழையையும் மாவீரனாக்கும்
ஏனோ?
காதல்,
என்னை மட்டும் ஊமையாக்கியதேனோ??
No comments:
Post a Comment