
என் மனதிலே என் மனதிலே நுழைந்தவள் நீதானே
உன்னைக் கண்டதும் உன்னைக் கண்டதும் நான் உள்ளே உடைந்தேனே
உன் ஜோடி கண்களின் வெளிச்சம் கண்டேன் முன்னாலே
பல குறிஞ்சிப் பூக்களும் பூத்தது அன்றே என்னுள்ளே
உன்னோடுதான் என் வாழ்க்கையே
என்றெண்ணினேன் அப்போழுதிலே.. (என் மனதிலே)
வாசம் அறியாப் பூவைப் போல திசையை அறியாப் பறவை போல
அலைந்து திரிந்தேன் நானும் இங்கே பெண்ணே உன்னைக் காணும் வரையில்
உந்தன் மேலே காதல் கொண்ட நானும் எங்கே கண்ணே கண்ணே
காதல் போயின் சாதல் என்ற பாரதியார் எங்கோ அங்கே
இசையாக நீயும் வந்தாய் கானமாக துடித்தேனே
அபஸ்வரமே வேண்டாம் என்றாய்.. உயிர் வரை வெந்தேனே..(என் மனதிலே)
உன்னைக் கண்ட ஒவ்வொரு நோடியும் பிறந்தேன் நானும் மீண்டும் மீண்டும்
பெண்ணே ஏனடி இன்னும் கோபம் வந்து சேர்ந்திடு இங்கே நீயும்
என் காதல் என்னைக் கொல்லும் உயிர் தருவாய் நீயே மீண்டும்
தேவதையை நேரில் கண்டால் உயிர் பிழைப்பேன் மீண்டும் நானே
தென்றலாக வந்தாய் நீயும் பூவாக உதிர்ந்தேனே
என் வாழ்வில் நீயே வந்தால் மலர்வேனே மீண்டும் நானே... (என் மனதிலே)
Tune: Vanna Nilave Vanna Nilave from "Ninaithen Vandhai"
பெண்ணே ஏனடி இன்னும் கோபம் வந்து சேர்ந்திடு இங்கே நீயும்
என் காதல் என்னைக் கொல்லும் உயிர் தருவாய் நீயே மீண்டும்
தேவதையை நேரில் கண்டால் உயிர் பிழைப்பேன் மீண்டும் நானே
தென்றலாக வந்தாய் நீயும் பூவாக உதிர்ந்தேனே
என் வாழ்வில் நீயே வந்தால் மலர்வேனே மீண்டும் நானே... (என் மனதிலே)
Tune: Vanna Nilave Vanna Nilave from "Ninaithen Vandhai"
No comments:
Post a Comment